இந்நிலையில், இந்தாண்டு துவக்கத்தில் நடந்த ஒரு போட்டியில் ஷிவ்பால் பங்கேற்றபோது, போட்டிக்கு முன்பாக, அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை ஷிவ்பால் உட்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் போட்டிகளில் பங்கேற்க, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜன்சி (நடா) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டால் 8 ஆண்டுகள் வரை அவர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஊக்க மருந்து சர்ச்சையில் 2வது முறையாக ஷிவ்பால் தற்போது சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங்கிற்கு இடைக்கால தடை: ஊக்க மருந்து டெஸ்டில் சிக்கினார் appeared first on Dinakaran.