வாகனம் மோதி டெய்லர் பலி

பரமத்திவேலூர், மே 22: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, வையப்பமலை, சித்தமூப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (45). இவர் வையப்பமலையில் டைலர் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம், சொந்த வேலையாக திருச்செங்கோடு சென்று விட்டு இரவு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் மற்றொரு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். தொண்டிப்பட்டி புதூர், காந்தி சிலை அருகே வந்தபோது பின்னால் வந்த வாகனம், பச்சமுத்து மீதி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வழியிலேயே பச்சமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி டெய்லர் பலி appeared first on Dinakaran.

Related Stories: