சிறப்பு கிராம சபை கூட்டம்

மல்லசமுத்திரம், ஜூன் 6: மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் வையப்பமலை அடுத்த மின்னாம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சித்தமூப்பன் பாளையம் கிராமத்தில் தமிழக முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வற்கான சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜா அறிக்கை வாசித்தார். இதில் பொதுமக்கள் 104 பேர் கலந்துகொண்டு விண்ணப்பங்கள் வழங்கினர்.

The post சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: