ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

சேந்தமங்கலம், ஜூன் 12: சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் ஊராட்சியில், ரூ.40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாதேஸ்வரன் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர். சேந்தமங்கலம் ஒன்றியம், பொட்டணம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி முன்னிலை வகித்தார். விழாவில் மாதேஸ்வரன் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை, கதிரடிக்கும் களம், அங்கன்வாடி மைய கட்டிடம், தடுப்பு சுவர், திருவிளக்கு கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட திட்ட பணிகளை தொடங்கி வைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், வட்டார பொறியாளர் மாதேஸ்வரன், ஊராட்சி ஆலோசனை குழு தலைவர் பிரபாகரன், முன்னாள் துணைத்தலைவர் தங்கராசு, தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் மணி, திமுக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: