ரூ.3.19 லட்சத்திற்கு‌ தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூர், ஜூன் 12: பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு‌ தேங்காய் விற்பனையானது. பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 265 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.62.10க்கும், குறைந்த பட்சமாக ரூ.40.29க்கும், சராசரியாக ரூ.57.57க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 690க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்றைய ஏலத்திற்கு 5 ஆயிரத்து‌ 227 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.64.79க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.15க்கும், சராசரியாக ரூ.‌63.69க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 840க்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post ரூ.3.19 லட்சத்திற்கு‌ தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: