கணவன், மனைவி சம்மட்டியால் அடித்துக் கொலை: பேரன் கைது

செஞ்சி: சொத்து பிரச்னையில் கணவன, மனைவி சம்மட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அக்கா பேரன் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் முன்னாள் ராணுவ வீரர் மரியதாஸ்(80), அவரது மனைவி செலின்மேரி (75). இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோஸ்லின் மேரி என்ற மகள் உள்ளார். மரியதாசுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மரியதாசின் அக்கா பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி பங்கு கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மரியதாஸ் மற்றும் செலின்மேரி ஆகியோர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பெரியநாயகியின் மகள் வழி பேரன், பெங்களூருவை சேர்ந்த ஜெபஸ்டீன் மகன் அபிஷேக் ஆவின்ராஜ் (22) திருவம்பட்டு கிராமத்திற்கு வந்து மரியதாஸ் மற்றும் செலின்மேரியை சந்தித்து சொத்தில் பங்கு கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அபிஷேக் ஆவின்ராஜ் அங்கிருந்த சம்மட்டியை எடுத்து இருவரின் தலையிலும் சரமாரியாக அடித்துள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தப்பி ஓட முயன்ற அபிஷேக் ஆவின்ராஜை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். தகவலறிந்து செஞ்சி போலீசார் வந்து அவரை கைது செய்தனர்.

The post கணவன், மனைவி சம்மட்டியால் அடித்துக் கொலை: பேரன் கைது appeared first on Dinakaran.

Related Stories: