ரூ.10,000 லஞ்சம் பெண் துணை தாசில்தார் கைது

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (59), இவர் தனது தாய் பெயரில் உள்ள நிலத்தை நத்தம் பட்டா கணினி பதிவேற்றம் செய்ய சீர்காழி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் தேவகியை சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது அவர் ரூ.15,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக ரூ.10,000 கொடுத்தால் தான் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார். இந்த பணத்தை துணை தாசில்தார் கூறியபடி தற்காலிக கணினி ஊழியர் டெல்பியிடம் நேற்று அலெக்சாண்டர் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, மண்டல துணை தாசில்தார் தேவகி, தற்காலிக கணினி பணியாளர் டெல்பி ஆகியோரை கைது செய்தனர்.

The post ரூ.10,000 லஞ்சம் பெண் துணை தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Related Stories: