வேலூர், மே 21: இளம்பெண்ணின் புகைப்படத்தை பெற்று அதை ஆபாசமாக மார்பிங் செய்து மின்னஞ்சலில் அவருக்கே அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த வாலிபர், தன்னுடன் பணிபுரிந்த இளம்பெண்ணிடம் நல்ல வேலை ஏதாவது இருந்தால் சொல்கிறேன் என்று சொல்லி அவரது பயோ டேட்டாவை புகைப்படத்துடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை வைத்து அப்பெண்ணை ஆபாசமாக மார்பிங் செய்து அந்த பெண்ணின் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், வேலூர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், இளம்பெண்ணின் புகைப்படத்ைத ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பிய காட்பாடியை சேர்ந்த வாலிபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பெண்களின் புகைப்படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பயன்படுத்தினாலோ அல்லது மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.