சென்னை: முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துனரை சஸ்பெண்ட் செய்து மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. வண்டலூரில் மாநகர பஸ்சில் ஏறிய முதியவர் ஒருவர், முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது, அந்த இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முடிவில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அந்த முதியவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கிய நடத்துனர் மற்றும் டிரைவர், அவரை சரமாரியாக தாக்கினர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இந்தநிலையில், விசாரணைக்கு பிறகு மாநகர பஸ்சில் ஏறிய முதியவரை ஓட்டுநர், நடத்துநர் தாக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
The post முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.