மனைவி இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுக்கும் பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவர்: ஒடிசாவில் 3 பேரும் மரணம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மனைவியின் மரணத்தால் மனமுடைந்த கணவர், தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் பரலாகேமுண்டி மாவட்டம் ஒடியா பரலாவை சேர்ந்த ஒருவரின் மனைவி கடந்த மார்ச் 21 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அந்த பெண்ணின் கணவர் (40), மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் அவரது ஏழு மற்றும் 11 வயது குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல் கவலையில் இருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கலந்த பிரியாணியை கொடுத்துவிட்டு, தானும் அந்த பிரியாணியை உட்கொண்டார். மயக்க நிலையில் கிடந்த மூவரையும் பார்த்த அக்கம்பக்கத்த்தினர், உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மூவரையும் மீட்டு பரலாகேமுண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மகன் இறந்தார்; தந்தையும் மகளும் பெர்ஹாம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, நேற்று காலை உயிரிழந்தனர்.

மேலும் இவர்கள் உட்கொண்ட பிரியாணி மாதிரி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரலாகேமுண்டி இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பூபதி தெரிவித்தார். மனைவியின் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்த இவர், சமீபத்தில் தொழிலில் நஷ்டமடைந்ததாகவும், இந்த சம்பவத்தின் முழு பின்னணியை அறிய தீவிர விசாரணை நடைபெற்று வருதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post மனைவி இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுக்கும் பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவர்: ஒடிசாவில் 3 பேரும் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: