திருச்செங்கோட்டில் ரூ.2.86 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு, மே 12: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி, இறையமங்கலம், கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யாறு, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தனி வாகனங்களில் மஞ்சளை கொண்டு வந்து குவித்தனர். விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.12349 முதல் ரூ.14899 வரையிலும் ஏலம்போனது. கிழங்கு மஞ்சள் ரூ.11471 முதல் ரூ.13099 வரையிலும், பனங்காளி ரூ.25621 முதல் ரூ.29155 வரையிலும் விற்பனையானது. ஆகமொத்தம் 3621 மூட்டைகள் ரூ.2.86 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post திருச்செங்கோட்டில் ரூ.2.86 கோடிக்கு மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: