திருச்செங்கோட்டில் நுங்கு விற்பனை ஜோர்

திருச்செங்கோடு மே 12: கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே பொதுமக்கள் தாகத்தை தணிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். முலாம்பழம், தர்பூசணி, எலுமிச்சை ஆகியவற்றை ஜூஸ் செய்து குடித்து வருகின்றனர். மேலும், அதிகளவில் நுங்கு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. திருச்செங்கோட்டில் பெரிய தெப்பக்குளம், கூட்டப்பள்ளி காலனி, தேர்நிலை வாலரை கேட் ஆகிய இடங்களில் வண்டி வண்டியாக நுங்குகளை கொண்டு வந்து இறக்கி வெட்டி விற்கின்றனர். 3 நுங்குகள் 20 ரூபாய்க்க விற்பனை செய்யப்படுகின்றது. சிறுவர் -சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் வந்து ஆர்வமாக நுங்கு வாங்கிச் செல்கின்றனர். நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதால் கிராமப் பகுதிகளில் இருந்து வரும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருச்செங்கோட்டில் நுங்கு விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: