இப்படி பதவி இழப்பு, பணி மாறுதல் என ஆசிரியர்கள் அலைகழிக்கப்பட்டனர். பல்வேறு பொய் வழக்குகளும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது அதிமுக தொடர்ந்தது. இந்த நிலையில் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த, இன்றைய முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு நேரடியாக வந்து, ‘உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். உங்கள் மீது இருக்கும் வழக்குகளையும் ஒழுங்கு நடவடிக்கையும் ரத்து செய்வேன்’ என்று வாக்குறுதி அளித்தார்.
அத்தகைய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். ஆசிரியர்கள் மீதுள்ள ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் ரத்து உள்ளிட்ட ஆணையை வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்று நன்றி தெரிவித்து கொள்கிறோம். நான் உட்பட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதனால் பலனடைகின்றனர்.
அதிமுக காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளால் பதவி உயர்வு பெறுதில் இருந்த சிக்கல், பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. இதற்கு, இந்த ஆணை மூலம் விடிவு கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாகவும் ஜாக்டோஜியோ சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ நன்றி appeared first on Dinakaran.