காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி-1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.51 கோடியே 5 லட்சம் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கடலூர் மாவட்டம், கீழக்குப்பம் பகுதி-1 திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.30 கோடியே 42 லட்சம் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கீழக்குப்பம் பகுதி-2 திட்டப் பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.5 கோடியே 15 லட்சம் செலவில் 48 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பாலக்கொல்லை திட்டப் பகுதியில் இரட்டை வீடுகள், ரூ.16 கோடியே 24 லட்சம் செலவில் 182 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவதிகை திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.15 கோடியே 37 லட்சம் செலவில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவாரூர் மாவட்டம் கண்டிதம்பேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.10 கோடியே 53 லட்சம் செலவில் 80 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கரூர் மாவட்டம் வேலம்பாடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.2 கோடியே 95 லட்சம் செலவில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சமீரன் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.