தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.207.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். திறக்கப்பட்ட குடியிருப்புகள் விவரம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் 14 தளங்களுடன் ரூ.63 கோடியே 34 லட்சம் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், விருதுநகர் மாவட்டம், சம்மந்தபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.80 கோடியே 74 லட்சம் செலவில் 864 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மதுரை மாவட்டம், உச்சபட்டி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.60 கோடியே 48 லட்சம் செலவில் 672 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம், சந்தைபேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.53 கோடியே 44 லட்சம் செலவில் 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், கீரணூர் பகுதி-2 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.57 கோடியே 18 லட்சம் செலவில் 512 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்,

காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி-1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.51 கோடியே 5 லட்சம் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கடலூர் மாவட்டம், கீழக்குப்பம் பகுதி-1 திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.30 கோடியே 42 லட்சம் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கீழக்குப்பம் பகுதி-2 திட்டப் பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.5 கோடியே 15 லட்சம் செலவில் 48 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பாலக்கொல்லை திட்டப் பகுதியில் இரட்டை வீடுகள், ரூ.16 கோடியே 24 லட்சம் செலவில் 182 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவதிகை திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.15 கோடியே 37 லட்சம் செலவில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவாரூர் மாவட்டம் கண்டிதம்பேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.10 கோடியே 53 லட்சம் செலவில் 80 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கரூர் மாவட்டம் வேலம்பாடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.2 கோடியே 95 லட்சம் செலவில் 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகங்கள்: சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ரூ.25 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சிஐடி நகர் பகுதி 6-ல் ரூ.64 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 7-ல் ரூ.66 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.51 கோடியே 77 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என மொத்தம் ரூ.207 கோடியே 90 லட்சம் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சமீரன் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: