சென்னை: தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பி.ஆர். கவாயை பாராட்டி மகாராஷ்டிரா பார் கவுன்சில் நடத்திய நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொள்ளாதது மிகவும் கண்டனத்திற்கு உரியது. இத்தகைய நெறிமுறைகள் மீறிய செயல், நீதித்துறையினருக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமாக இருந்த மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள 2வது தலித் நீதிபதி கவாய், அரசியலமைப்பு சரத்துகள் தொடர்பாக மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்தவர். எந்த நிலையிலும் சமரசம் செய்யாதவர். அதனால் தான் அவருக்கு உரிய மரியாதையை தரவில்லை என்று ஐகோர்ட் வழக்கறிஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
The post தலைமை நீதிபதிக்கு மரியாதை தராத மகாராஷ்டிரா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.