கவிஞர் வெண்ணிலா-முருகேசன் தம்பதியின் மூத்த மகள் கவின்மொழி அண்மையில் நடந்த தேர்வில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவரது தங்கை நிலா பாரதி தற்போது வனப் பணிக்கு தேர்வாகி உள்ளார். ஒரே ஆண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ஐ.பி.எஸ் மற்றும் ஐஎப்எஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐஎப்எஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடத்தை பிடித்த மாணவி நிலாபாரதி, சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு நேற்று வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து, நினைவு பரிசு வழங்கினார்.
* தொடர்ந்து, நிலாபாரதி அளித்த பேட்டி: இந்த தருணம் எனக்கு சந்தோஷமாக உள்ளது. இதற்கு முதல் காரணம் எனது அம்மா தான். அம்மா ஒரு நாள் வந்து எப்போவோ எடுத்திருந்த யுபிஎஸ்சி அப்ளிகேசனை காண்பித்தார். அப்போ நான் 3வது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வீட்டு சூழ்நிலை கைகொடுக்கவில்லை. டீச்சர் வேலைக்கு போனால் தான் வீட்டில் ஒரு நல்ல நிலைமை வரும் என்பதால் போனதாக அம்மா சொன்னார். அப்போது இருந்து ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஒரு இன்ஸ்பிரேசன் எனக்கு வந்தது. தொடர்ந்து அக்கா எந்த வழியில் போறாங்களோ அந்த வழியில்தான் நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
பிளஸ் 1, பிளஸ் 2 படித்ததில் இருந்து, அதன் பிறகு வேளாண்மை பாடத்தை எங்கள் பட்டப்படிப்பில் தேர்வு செய்தது வரை. தற்போது அக்கா வழியிலும் யுபிஎஸ்சியிலும் தேர்வு செய்து இருக்கிறேன். அக்காவின் இன்ஸ்பிரேசன் தான், இப்போது அஸ்பிரேசனாகியிருக்கிறது. இந்திய வனப்பணியை பொறுத்தவரை எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஐஏஎஸ் ஆவதுதான் எனது கனவு. அடுத்த வரவிருக்கிற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் எனது முயற்சி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒரே வீட்டில் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வில் சாதித்த அக்கா, தங்கை: அம்மாவின் கலெக்டர் கனவை நிறைவேற்றுவேன் என தமிழ்நாட்டில் ஐஎப்எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி appeared first on Dinakaran.