கடந்த 21ம் தேதி நடந்த விசாரணையின் போது ஆஜரான ஒன்றிய அரசின் துணை சொலிசிட்டர் எஸ்.பி. பாண்டே, ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து அந்த நாட்டிடம் விவரங்களை அரசு கோரியுள்ளது. எனவே இறுதி முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து மே 5ம் தேதி வரை அவகாசம் அளித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ராஜிவ் சிங் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், மனுதாரரின் புகாரை தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு எந்த கால அவகாசத்தையும் வழங்க இயலவில்லை. எனவே மனுவை நிலுவையில் வைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினர்.
The post பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.