இந்தியா – பாக். போரால் நிறுத்தப்பட்டது; அட்டாரி – வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு மீண்டும் தொடக்கம்: இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி


அமிர்தசரஸ்: அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வை காண பொதுமக்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றம்சாட்டிய இந்தியா, அதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதற்கு எதிர்வினையாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலை இந்திய ஆயுத படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இதனிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வௌியேற வேண்டும் என்பன உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. அதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை விதித்தது. மேலும் இருநாடுகளும் தங்கள் வான்வௌியை பயன்படுத்த பரஸ்பர தடை விதித்ததால் விமான போக்குவரத்தும் முடங்கியது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா பாகிஸ்தான் எல்லையான அட்டாரி வாகா பகுதியில் உள்ள எல்லை கதவுகள் அடைக்கப்பட்டு, அங்கு நாள்தோறும் மாலையில் நடக்கும் கொடி இறக்க நிகழ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 12 நாள்களுக்கு பிறகு அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு நேற்று மாலை முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நேற்று ஊடகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று முதல் கொடி இறக்க நிகழ்வை காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் இந்த நிகழ்வின்போது, முன்புபோல் பாகிஸ்தான் படை வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மாட்டார்கள்,

The post இந்தியா – பாக். போரால் நிறுத்தப்பட்டது; அட்டாரி – வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு மீண்டும் தொடக்கம்: இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: