அரசு அளிக்கும் பட்டியலில் இல்லாதவருக்கு பதவி; துணை வேந்தரை கேரள ஆளுநர் தன்னிச்சையாக நியமித்தது செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி


திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆரிப் முகம்மது கான் கவர்னராக இருந்தபோது கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிஜிட்டல் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் பதவி காலியானது. அதைத்தொடர்ந்து துணை வேந்தர்களை நியமிக்க கேரள அரசு ஒரு பட்டியல் தயாரித்து கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் ஆரிப் முகம்மது கான் அந்தப் பட்டியலை நிராகரித்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவபிரசாத் என்பவரையும், டிஜிட்டல் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் நிசா தாமஸ் என்பவரையும் தற்காலிக துணை வேந்தர்களாக நியமித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசு அளிக்கும் பட்டியலில் இருந்து தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு உத்தரவிட்டது. தற்போது தற்காலிக துணை வேந்தர்களாக உள்ள இருவரது பதவிக் காலம் இம்மாத இறுதியில் நிறைவடைவதால் அவர்கள் இருவரையும் பணியில் தொடரவும், இந்தப் பல்கலைக்கழகங்களில் விரைவில் நிரந்தர துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அரசு அளிக்கும் பட்டியலில் இல்லாதவருக்கு பதவி; துணை வேந்தரை கேரள ஆளுநர் தன்னிச்சையாக நியமித்தது செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: