மணிப்பூர் வன்முறை: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் பற்றி விசாரிக்கும் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை 3ம் முறையாக ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா இனத்தவரிடையே ஏற்பட்ட மோதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வௌியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு இப்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விசாரிக்க கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் லம்பா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷூ சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 3ம் முறையாக விசாரணை குழுவின் பதவிக்காலத்தை 2025 நவம்பர் 20 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

The post மணிப்பூர் வன்முறை: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: