சாதிவாரி கணக்கெடுப்பை அரசு எடுத்தால்தான் பின்தங்கிய மக்களின் உண்மை நிலையை அறிய முடியும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மக்கள் தொகை சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு (caste census) என்பது வேறு. சாதிவாரி கணக்கெடுப்பு (caste survey) என்பது வேறு. சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசுதான் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். அதனை தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். தலையை எண்ணும் வேலையை மட்டும்தான் ஒன்றிய அரசு செய்யும். மாநில அரசுதான் மக்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை, வாழ்வியல் நிலை ஆகியவற்றை துல்லிகயமாக எடுக்க முடியும்.

 

The post சாதிவாரி கணக்கெடுப்பை அரசு எடுத்தால்தான் பின்தங்கிய மக்களின் உண்மை நிலையை அறிய முடியும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: