நாமக்கல் மாவட்டம் 92.46 சதவீத தேர்ச்சி

நாமக்கல், மே 17: தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 அரசு பொதுத்தேர்வினை 197 பள்ளிகளை சார்ந்த 9,226 மாணவர்களும், 9,489 மாணவிகள் என மொத்தம் 18,715 பேர் எழுதினர். இதில் 8,326 மாணவர்கள், 8,978 மாணவிகள் என மொத்தம் 17,304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.46 சதவீத தேர்ச்சியாகும். இந்த ஆண்டு 43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 6 பள்ளிகள் அரசு பள்ளிகளாகும். மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் நாமக்கல் மாவட்டம் 19வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post நாமக்கல் மாவட்டம் 92.46 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: