சேந்தமங்கலம், மே 22: சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் மூலம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. சேந்தமங்கலம், காளப்பநாயக்கன் பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம் ஆகிய குறுவட்டத்தை சேர்ந்த கிராமமக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா, சிட்டா, பெயர் நீக்குதல், சேர்த்தல், பட்டா மாறுதல், நிலம் அளவீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுக்களை ஜமாபந்தி அலுவலரான நாமக்கல் உதவி ஆணையர் கலால் கனகமாணிக்கத்திடம் வழங்கினர்.
தாசில்தார் வெங்கடேஸ்வரன் தலைமையில், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மனுக்கள் மீது பரிசீலனை செய்து, இடங்களை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜமாபந்தி கடைசி நாளன்று கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரரை வரவழைத்து உத்தரவு ஆணைகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 157 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
The post 3வது நாள் 157 மனுக்கள் குவிந்தது appeared first on Dinakaran.