திருச்செங்கோடு, மே 22: திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் பைரவநாதமூர்த்தி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த பைரவநாதமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் வெண்பூசணி மற்றும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post தேய்பிறை அஷ்டமி வழிபாடு appeared first on Dinakaran.