நாமக்கல், மே 21: நாமக்கல்லில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெறவண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய தொழிற்சங்க பேராயம் மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமை வகித்தார். இதில், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட துணைத்தலைவர் வரதராஜன், இந்திய தொழிலாளர் சம்மேளனம் மாவட்டத்தலைவர் கலைவாணன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். இதில் மத்திய, மாநில தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.
The post தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.