சேந்தமங்கலம், மே 23: சேந்தமங்கலம் அருகே கோயில் விழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் விவசாயியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மேதரமதேவி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பரமசிவம்(45), லாரி டிரைவரான சபின்(23) ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும், ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, சபின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பரமசிவத்தின் தலை, கை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். மயங்கி விழுந்த பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சபினை கைது செய்தனர்.
The post ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ரகளை விவசாயியை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது சேந்தமங்கலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.