பெரம்பலூர்,மே 21: பெரம்பலூரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப் பட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு நேற்று அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகர் விரிவாக்க பகுதியான தில்லைநகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது. இங்கு குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள டிவி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ் போன்றவை அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாரம் விட்டு விட்டு வருவதால் பேன், ஏசி அடிக்கடி நின்றும், பழுது ஏற்பட்டும் வந்தது. இதனால் அதிக மின்திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்சார வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக மின் வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களால் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது.
இதனை ஏற்று மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, கல்யாண் நகர், தில்லை நகர் ஏரிக்கரை பகுதியில் 100 கேவி திறன் கொண்ட புதிய டிரான்ஸ் பார்மர் அமைத்தனர். இதையடுத்து நேற்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அசோக் குமார் புதிய டிரான்ஸ் பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன், உதவி மின் பொறியாளர் சரவணன், போர்மேன்கள் வேணு கோபால், சங்கர் மற்றும் லைன்மேன்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post பெரம்பலூரில் புதிய டிரான்ஸ்பார்மர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு appeared first on Dinakaran.