பெரம்பலூர் மே 17: 2024-25ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி காவ்யா 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். அவரை பள்ளி தாளாளர் நிருபா சரவணன் பாராட்டினார். மேலும், மாணவி எஸ்.கனிஷ்கா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், டி.தனு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முன்றாம் இடமும் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் தமிழில் 21 பேரும், ஆங்கிலத்தில் 26 பேரும், கணிதத்தில் 16 பேரும், அறிவியலில் 18 பேரும், சமூக அறிவியலில் 26 பேரும் 90க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள் , பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தாளாளர் நிருபா சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.