அரியலூரில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

 

அரியலூர் மே 23: அரியலூர் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றியம், திருக்களப்பூர் ஊராட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சிகளிலிருந்து விலகி மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த மாற்று கட்சியினரை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திமுக சால்வை அணிவித்து வரவேற்றார்.இந்நிகழ்வில், ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரெங்கமுருகன் மற்றும் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்

The post அரியலூரில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: