குன்னம் மே 23: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது, குரும்பலூர் கிராமத்தில வசிக்கும் சாமிநாதன் மகன் கந்தசாமி (70), குரும்பலூர் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த சின்னசாமி மனைவி லட்சுமி (45) ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மற்றும் அவரது குழுவினர் கந்தசாமி, லட்சுமி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மாவட்ட கலெக்டர் தகவல் 5 கிலோ குட்கா பறிமுதல் – பெண் உட்பட இருவர் கைது appeared first on Dinakaran.