பெரம்பலூர்,மே.17: 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.46 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடம் பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை 4,180 மாணவர்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 பேர் எழுதினர். இதில் 3,966 மாணவர்களும், 3,662 மாணவிகளும் என மொத்தம் 7,628 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.88. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.23 ஆகும். மாணவர்களைக் காட்டிலும், மாணவிகள் 3.35 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.77 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் எட்டாம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை 3,834 மாணவர்களும், 3,521 மாணவிகளும் என மொத்தம் 7,355 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 3,484 மாணவர்களும், 3,324 மாணவிகளும் என மொத்தம் 6,808 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார், சுயநிதிப் பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தம் 81 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில் மொத்தம் 24 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.46 சதவீத தேர்ச்சி: பிளஸ் 1 பொதுத் தேர்வில் 92.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.