வேலூர், ஏப்.23: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சென்றார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில், சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் சீமான்(30) என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது தெரியவந்தது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணம் செய்திருப்பதாக சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சமூக நல அதிகாரிகள், காட்பாடி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சீமான் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது ‘போக்சோ’ வழக்கு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.