வேலூர், ஏப்.24: வேலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ேவலூர் அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(34). இவரது மனைவி ராஜகுமாரி(29). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜகுமாரிக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணமாகாததால் விரக்தியடைந்தவர், கடந்த 21ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். சத்தம் கேட்டு சென்ற குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post 2 குழந்தைகளின் தாய் தற்கொலை வேலூர் அருகே appeared first on Dinakaran.