கனிமவளத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் மணல் கடத்தலை தடுக்க முயன்ற

வேலூர், ஏப்.26: வேலூர் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், புதுவசூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்துவதாக வேலூர் மாவட்ட கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிரவீன்குமாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடியவிடிய பல்வேறு இடங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதிகாலையில் புதுவசூர் அருகே பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிலர் வாகனங்களில் மணலை கடத்திச்சென்றது தெரியவந்தது. அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது வாகனத்தை நிறுத்தாமல் உதவி இயக்குனர் பிரவீன்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியை சேர்ந்த பெருமாள்(33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கனிமவளத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் மணல் கடத்தலை தடுக்க முயன்ற appeared first on Dinakaran.

Related Stories: