ஆட்டு சந்தையில் வியாபாரம் மந்தம் கே.வி.குப்பத்தில் பிரசித்திபெற்ற

கே.வி.குப்பம், ஏப்.22: கே.வி.குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டு சந்தையில் நேற்று வியாபாரம் மந்தமாக இருந்தது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் பிரசித்திபெற்றது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆட்டு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் என்பதால் பல்வேறு ரக ஆடுகள் வியாபாரிகள் கொண்டு வந்தனர். சந்தையும் எதிர்பாரத்த அளவிற்கு நல்ல லாபம் கிடைத்ததாக ஆடு வளர்பவர்கள், ஆடு விற்கும் வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. ஆனால் கடந்த வாரங்களை போலவே நேற்று நடைபெற்ற சந்தையில், ஆடுகள் வரத்து அதிகமாக காணப்பட்டது. காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை கொண்டு வந்தனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஆடுகளை கொண்டுவந்தனர். கடந்த வாரத்தை போலவே ஆடுகள் அதிகமாக இருந்தன. தவிர வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆட்டு சந்தையில் வியாபாரம் மந்தம் கே.வி.குப்பத்தில் பிரசித்திபெற்ற appeared first on Dinakaran.

Related Stories: