சரக்கு வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

பல்லடம், ஏப். 3: பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமார் (18). இவர் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் பேசிவிட்டு வீடு செல்வதற்காக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பகுதியில் ரோட்டின் எதிர்புறமாக நடந்து சென்றார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பூண்டு பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் ஓட்டுனர் தேனியை சேர்ந்த வினோத் கோபி (40), என்பவரை கைது செய்தனர்.

The post சரக்கு வேன் மோதி கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: