கர்மவீரர் காமராஜர் விருது பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு

 

காரமடை, ஏப்.5: தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு கர்மவீரர் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023-24ம் கல்வியாண்டில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மோகித் என்ற மாணவனும், சுப்ரியா, பவித்ரா என்ற இரு மாணவிகளும் கர்மவீரர் காமராஜர் விருதினை அண்மையில் பெற்றனர்.

விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும்,தலா ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவினர் நேற்று பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post கர்மவீரர் காமராஜர் விருது பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: