வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு: மதுரை எம்பி கண்டனம்

மதுரை: வானிலை ஆய்வு மைய அறிக்கையில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில், ‘‘தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பாஜவிற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

The post வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு: மதுரை எம்பி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: