புழல் மத்திய சிறை அருகே செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி

புழல்: புழல் மத்திய சிறைச்சாலை அருகே சிக்னல்கள் உள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக செங்குன்றத்தில் இருந்து புழல் நோக்கி செல்லும் திசையில் உள்ள சிக்னல்கள், காந்தி பிரதான சாலையை நோக்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பாதசாரிகள், சாலையை கடப்பதில் அவதிப்படுகின்றனர்.

வாகனங்கள் வருகிறதா, இல்லையா என்பதை அறிய முடியாமல் சிறிது நேரம் பொறுமையாக நின்று கவனித்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாதவரம் போக்குவரத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுத்து செயல்படாத சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல் மத்திய சிறை அருகே செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: