18 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகையான நேற்று 62,263 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,733 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.63 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

The post 18 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: