வடமதுரை, மார்ச் 21: வடமதுரை அருகேயுள்ள கோப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜனகர்பாண்டி (26). கட்டிட தொழிலாளி. இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜனகர்பாண்டி நேற்று முன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜனகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து இந்துமதி அளித்த புகாரின் பேரில் வடமதுரை எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post தொழிலாளி திடீர் சாவு appeared first on Dinakaran.