ஆரணி, மார்ச் 23: ஆரணி அடுத்த வடுக்கசாத்து ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(40), விவசாயி. அதேபகுதியை சேர்ந்த பிரபு(37), கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மதுகுடித்துவிட்டு சாலையில் நின்று பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, விநாயகமூர்த்தி தனதுநிலத்திற்கு சென்றபோது, அவரை பிரபு ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால், விநாயகமூர்த்தி அவரை தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறில், ஆத்திரமடைந்த பிரபு மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து விநாயக மூர்த்தியின் கையை வெட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த விநாயகமூர்த்தியை அக்கம் பக்கதினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
The post ஆரணி அருகே விவசாயிக்கு கத்திவெட்டு: தொழிலாளிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.