அரசு கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம்

திருச்செங்கோடு, மார்ச் 23: திருச்செங்கோடு, அர்த்தநாரீசுவரர் கலை அறிவியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. முதல் கட்டமாக, மூலிகை தோட்டம், பசுமை உறுதிமொழி சுவர் திறந்து வைக்கப்பட்டது. மாணவி கணிஷாஸ்ரீ வரவேற்றார். மன்ற ஒருங்கிணைப்பாளர் சரவணன், சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கங்கள், செயல்பாடுகளை விளக்கினார். கல்லூரி செயலர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் வெங்கடாசலம், அனைத்து துறை பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர். இதில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி முன்னாள் பேராசிரியர் லோகநாதன் கலந்து கொண்டார். விழாவில், உதவி பேராசிரியர்கள் சித்ரா, சரவணகுமார் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் அதிகமாக ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாணவி ஜீவிதா நன்றி கூறினார்.

The post அரசு கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் appeared first on Dinakaran.

Related Stories: