சாக்கடை கால்வாயில் விழுந்து பரோட்டா மாஸ்டர் பலி

ஈரோடு, மார்ச் 20: சேலம் மாவட்டம் வெள்ளப்பம் பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரடன் (57). இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஈரோட்டில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி மாலை மதுபோதையில் இருந்த ரவிச்சந்திரன் ஈரோடு நேரு வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்ததால் படுகாயமடைந்துள்ளார். இதனைக் கண்ட சாலையில் செல்வோர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கலா (53), அளித்த புகாரின் அடிப்படையில், ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சாக்கடை கால்வாயில் விழுந்து பரோட்டா மாஸ்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: