மொடக்குறிச்சி, மார்ச்14: அரச்சலூர் அடுத்த ஜேஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, இவரது மனைவி மாரியம்மாள் (52).கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.மாரியம்மாளின் கணவர் கோவிந்தசாமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து மாரியம்மாள் கடந்த ஒரு மாத காலமாக மனநலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கும் கோயிலுக்கும் சென்று வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்க சென்றவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காமல் இருந்தது.மகன் பாஸ்கரன் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து மகன் பாஸ்கரன் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரச்சலூர் போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.