மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்

ஈரோடு, மார்ச் 20: மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்தடைந்தது. ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.  இதில், 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது.

அதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த, நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றம் செய்து பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: