சேந்தமங்கலம், மார்ச் 20: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி மலைவேப்பன் குட்டை புது காலனியை சேர்ந்தவர் பழனி. விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி (45), கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம், ராசாத்தி அங்குள்ள வாரசந்தைக்கு காய்கறி வாங்க சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, சேந்தமங்கலம்- ராசிபுரம் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த டூவீலர் ராசாத்தி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராசாத்தி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டூவீலர் மோதி பெண் பலி appeared first on Dinakaran.