நாமக்கல், மார்ச் 25: நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹23,528 மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 590 மனுக்களை, கலெக்டர் உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர், அதனை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ₹23,528 மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் appeared first on Dinakaran.