அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு போலீசார் விசாரணை ெசங்கம் அருகே வெவ்வேறு இடங்களில்

செங்கம், மார்ச் 20: செங்கம் அருகே வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பார்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையா அல்லது விபத்தா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தரடாபட்டு மதுபான கடை அருகே உயிரிழந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய தண்டராம்பட்டு காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சடலமாக இருந்த இரு ஆண்களின் முழு விவரம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு போலீசார் விசாரணை ெசங்கம் அருகே வெவ்வேறு இடங்களில் appeared first on Dinakaran.

Related Stories: