காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு டார்ச்சர்; வாலிபர் கழுத்தறுத்து கொலை: மகனுடன், தந்தை கைது

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே காதலிக்குமாறு மகளுக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை கழுத்தறுத்து கொன்ற தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டியை சேர்ந்த ராமன் மகன் அடைக்கப்பன்(24). கோவையில் வேலைபார்த்து வந்த இவர், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை பொன்னமராவதி அருகே அரியாண்டி கண்மாய் கரையில் கழுத்தறுபட்ட நிலையில் உடல்களில் ஆங்காங்கே கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக இதே ஊரை சேர்ந்த காத்தான்(61), அவரது மகன் கதிரவன்(24) ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பன், காத்தானின் மகளிடம் தன்னை காதலிக்குமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காத்தான், கதிரவன் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் தந்தை, மகன் சேர்ந்து அடைக்கப்பனை கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

The post காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு டார்ச்சர்; வாலிபர் கழுத்தறுத்து கொலை: மகனுடன், தந்தை கைது appeared first on Dinakaran.

Related Stories: